Archive for ஆகஸ்ட் 2012

கடந்த 8 ஆண்டுகளாக ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார். சனிக்கிழமையன்று காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள லால்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முஸ்லிம் சமுதாயத்தினர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் திருமாளவளவனும் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், கடந்த 8 ஆண்டுகளாக ரமலான் மாதத்தில் 3 நாள்கள் நோன்பு நோற்று வருவதாகவும் இந்த ஆண்டு கடந்த 3 நாள்களாக நோன்பு நோற்றதாகவும் கடந்த வெள்ளிக் கிழமையுடன் தன்னுடைய நோன்பை முடித்துக் கொண்டதாகவும் கூறினார்

8 ஆண்டுகளாக நோன்பு நோற்கிறேன் : திருமாவளவன்!



லண்டன்: இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஐ.நா மற்றும் ஐரோப்பிய யூனியன் தூதராக செயல்பட்டு வருகிறார்.கிறிஸ்தவரான டோனி பிளேர் எந்த மதத்தின் மீதும் பற்று இல்லாமல் இருந்தார் . தற்போது அவர் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குரானை தினந்தோறும் படித்து வருகிறார்.

இதுகுறித்து டோனி பிளேர் கூறியதாவது: குரானை படிப்பதால்நம்பிக்கையுள்ளவனாக இருக்கிறேன். சர்வதேச அளவில் செயல்பட நம்பிக்கையுடையவனாக இருக்க வேண்டும் . அதற்காகதினந்தோறும் குரான் படிக்கிறேன். உலக நடப்புகளை புரிந்து கொள்ளவும், குரான் போதனைகள் உதவுகிறது. இது ஒரு சீர்திருத்தபுத்தகம் இதில் எல்லா விஷயங்களும் உள்ளன. அறிவியலை போற்றி , மூட நம்பிக்கைகளை நீக்கச் செய்கிறது இவ்வாறு டோனிபிளேர் கூறியுள்ளார்.

யா அல்லாஹ் இவருக்கு இஸ்லாத்தின் நேரிய வழியை காட்டி உன்னுடைய பாதையில் இணைத்துக்கொள்வத
ற்கு உதவி செய்வாயாக

நன்றி

தினகரன்

latest-breaking-news.aspx?id=
13246

இஸ்லாத்தை நோக்கி டோனி பிளேர்....