Archive for ஏப்ரல் 2012


தீண்டாமை கொடுமை என்பது காந்திஜி காலத்திலும் இருந்தது. காந்திஜிக்கு முன்னாலும் இருந்தது. இன்றும் இருக்கிறது - அது நாளையும் தொடருமோ? ஏன்ற அச்சம் எனக்கு இருக்கிறது. இந்த இனிய நிகழ்ச்சிக்கு நடுவராக இருக்கும் திரு. சுந்தரராமசாமி, பிரபல எழுத்தாளர் - சிறந்த நாவலாசிரியர் என்ற சிறப்பு இருந்தாலும், அதோடு மேலும் ஒரு சிறப்பு, அவர் உயர்ந்த வகுப்பை சேர்ந்தவர் என்பதாகும். எனவே, இந்த நிகழ்ச்சி அவர் தலைமையில் நடைபெறுவது, மிகவும் பொருத்தமே.

இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை விளக்கங்களை தர இருக்கின்ற நீங்கள் - படித்தவர்கள் பட்டங்கள் பெற்றவர்கள், பல ஆய்வுகளை மேற்கொண்டிருப்பவர்கள் என்பதை நான் அறிவேன். எனவே தான் உங்களைப் பார்த்து நான் கேட்பதெல்லாம் தீண்டாமை என்னும் இந்த தீராத பிரச்சினைக்கு நீங்கள் எடுத்து வைக்கின்ற வாதங்கள் கருத்துகள் சிறப்புடையதாக - தீர்வு காணக்கூடிய வகையில் - அது அமைய வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.

எனவே, அருமை நண்பர்களே!



நாம் இங்கு மனம் திறந்து பேசுவோம். நானும் மனம் திறந்தே பேச விரும்புகிறேன். மரியாதைக்குரிய நடுவர் அவர்கள் குறிப்பிட்டார்கள், தீண்டாமை என்பது இடைக்காலத்தில் பழமைவாதிகளால் அதாவது, மனிதனால் மனிதனுடைய தேவைகளுக்காக மனிதன் ஏற்படுத்திக் கொண்டவையாகும். அது இடைச்செருகலே, அதை ஒழிப்பதற்காகவே காந்திஜி போராடினார். நாமும் காந்திஜி போராடிய அவர் வழி நின்று போராடி வெற்றி பெறுவோம் என்றார்கள்.

அன்பார்ந்த நண்பர்களே!

புறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி!

  திருக்குரான் பெரும்பாலும் இணையத்தில் தான் படிக்கின்ற மாதிரி இருக்கிறது. அதனால் இணையம் இருப்பின் மட்டுமே பார்த்துக் கொள்ளும் படி இருந்தது. அந்தக்குறையைப் போக்கும் வகையில் குரான் நூலானது தமிழிலும் பயன்படுத்துகிற வகையில் சிறப்பாக மென்பொருள் வடிவத்தில் அமைக்கப் பட்டுள்ளது. இதனால் குரானை உங்கள் கணிணியிலேயே வைத்துப் படிக்கலாம். பயன்படுத்தலாம். Zekr என்ற இந்த மென்பொருள் நேர்த்தியான வடிவமைப்புடன் எளிதாகப் பயன்படுத்தும் படியும் இருக்கிறது.

தமிழில் குரான் அருமையான இலவச மென்பொருள்